தஞ்சாவூர் மே 20
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பி னரும் பூண்டி புஷ்பம் கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளராக இருந்த மறைந்த கல்வி காவலர் பூண்டி துளசி ஐயா வாண்டையார் 3வது ஆண்டு நினைவஞ்சலி முன்னாள் மாணவர்கள் சார்பில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா தலைமை தாங்கினார்.முன்னாள் முதல்வர் உரு.ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார்
முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்தி ரன் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கினார். முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செல்வம் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி,தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி,மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் பத்திரிகையாளர் சீனிவாசன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர்
நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் உதய குமார் ஆடிட்டர் ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமான பேராசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் முதல்வர் உரு.ராஜேந்திரன் அடுத்த ஆண்டுக்குள் பூண்டி ஐயாவுக்கு தஞ்சாவூர் மாநகரில் திருஉருவ சிலை அமைக்கப்படும் என்று கூறினார்.