ஈரோடு ஜூன் 5
மறைந்த முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிறைவு மற்றும் 101 வது பிறந்தநாள் ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் சிறப்பான கொண்டாடப்பட்டது ் இதில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்
இதன் பிறகு பொது மக்களுக்கு. இனிப்பும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன
இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரகாஷ் மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியம்,மாநிலநிர்வாகிகள் எஸ் எல் டி சச்சிதானந்தம் சந்திரகுமார் அவை தலைவர் குமார் முருகேஷ் மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில் குமார் செல்ல பொன்னி பொருளாளர் பி கே பழனிச்சாமி பொதுக்குழு உறுப்பினர் குமாரசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் செய்திருந்தார்.