தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் உள்ள டி டி டி ஏ மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு குழந்தைகள் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு குழந்தைகளுக்கு உணவு வழங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் சரவணன், நகர செயலாளர் பிரகாஷ், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் கணேஷ், கண்ணன்,மதியழகன்,சிவாஜி, ரெஜிகலா,சங்கர்ராஜா,மூபீன், முத்துக்கருப்பன், முப்புடாதி மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கிப்ட்சன் செய்திருந்தார்.



