தி.வ.மலை பிப்ரவரி 21
திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள். மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், தலைமையில்
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பாக பயனாளிகளுக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.