ஆசிரியர் கூட்டமைப்பு எப்ஏபி மாநில விருது லிங்கா குளோபல் சிபிஎஸ்இ பள்ளிக்கு வழங்கப்பட்டது
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் கல்வி குழுமம் லிங்கா குளோபல் பள்ளிக்கு சிறந்த பள்ளி முதல் வர் விருது வழங்கப்பட்டது
தனியார் பள்ளி ஆசிரியர் சங்க கூட்டமைப்பு – ”எப்ஏபி – மாநில விருது” சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளை தேர்ந்தெடுத்து சிறந்த பள்ளிக்கான விருதும், சிறந்த முதல்வருக்கான விருதும், லிங்கா குளோபல் பள்ளி முதல்வா் முனைவர் அல்கா சர்மாவிடம் கோவையில் நடைபெற்ற விழாவில் எப்ஏபி நிர்வாக இயக்குனர் ஜக்ஜித்சிங் விருதுகளை வழங்கினார்.
விருதுகள் பெறக் காராணமான பள்ளி முதல்வர், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களையும் பள்ளித் தலைவர் முனைவர் கே. ஸ்ரீதரன், செயலாளர் டாக்டர் எஸ். அறிவழகி, இயக்குநர்கள் முனைவர் எஸ். சசி ஆனந்த், எஸ். அர்ஜுன் கலசலிங்கம் , துணை வேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன் ஆகியோர் பாராட்டினர்.