ராமநாதபுரம், ஜுலை 29-
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி பேரூராட்சியில் அமீர் சுல்தான் அகாடமி மைதானத்தில் அப்பள்ளியின் தாளாளர் எம்.அப்துல் ரவூப் நிஸ்தார் தலைமையில் கல்வி தந்தை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் நினைவு சுழற் கோப்பைக்கான மாவட்ட பள்ளிகளுக்கு இடையான கைப்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
15க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடினர். விளையாட்டு போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக அல்-ஹிலால் பள்ளி தாளாளர் கே.அகமது இப்ராஹிம், முணவ்வரா பள்ளி தாளாளர் எஸ்.சலாமத் ஹுசைன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட இறகு பந்து கழகம் மாவட்ட துணைத் தலைவர் எம்.சாதிக் பாட்சா, ஜிப்ரிக் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் பல்வேறு பள்ளி விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்ட போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு அமிர் சுல்த்தான் அகடாமி பள்ளியும் கீழக்கரை ஹமிதியா பள்ளி விளையாட்டு வீரர்கள் இறுதி ஆட்டத்தில் கலந்து கொண்டனர். இறுதி ஆட்டத்தை அல்ஹிலால் பள்ளி தாளாளர் k அகமது இப்ராஹிம் முனவ்வரா பள்ளி தாளாளர் எஸ் சலாமத் உசேன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட இறகு பந்து கழக துணை தலைவர் எம்.சாதிக் பாட்சா மற்றும் ஜமாத் நிர்வாகிகள் இறுதி ஆட்டத்தை தொடங்கி வைத்தனர். இறுதி ஆட்டத்தில் தொண்டி அமீர் சுல்தான் அகாடமி விளையாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடி சுழற் கோப்பை பரிசு மற்றும் நினைவு பரிசு பெற்றனர். இரண்டாம் இடம் கீழக்கரை ஹமீதியா பள்ளி மாணவர்கள் பெற்றனர். பரிசுகளையும் சான்றிதழ்களையும் பள்ளியின் தாளாளர் வழங்கினார். ஆசிரியர் பாபு நன்றி கூறினார்.