மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மருதன்கோடு பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் (36) , இவர் கேரளாவில் கட்டிட காண்ட்ராக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அமிஷா( 31 ) , மனைவியும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு குழந்தைகளும் உண்டு, இவர்களுக்கு 2016 -ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரது தந்தை மரணம் அடைந்ததை அடுத்து, சிறு வயதிலிருந்தே, சித்தப்பா ஜாஸ்பர் தேவகுமார் (57 ) ,பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இவர்
சவுண்ட் சிஸ்டம் நடத்தி வருகிறார். இருவருக்கும் வீடு அருகருகாமையில் உள்ளது . இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி அமிஷா தனியாக இருந்தபோது,
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜாஸ்பர் தேவகுமார் உள்ளே புகுந்து , அமிஷா-வை வலு கட்டாயமாக ஆடைகளை கிழித்தெறிந்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துளௌளார். அப்போது அமிஷா, திமிறி போராடியுள்ளார் .மற்றும் கத்தி கூச்சலிட்டு உள்ளார்.மேலும் அமிஷா பலத்த காயமடைந்துள்ளார். இதையடுத்து, சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அப் பகுதியில் வந்ததை அடுத்து. ஜாஸ்பர் தேவகுமார் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதை அடுத்து வர்கீஸ் அவரது சித்தப்பா ஜாஸ்பர் தேவகுமாரிடம் தட்டி கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரம் கொண்ட வர்கீஸ் சித்தப்பாவின் வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளார். பின்னர் அவரது மனைவி அமிஷாவை குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதை அடுத்து போலீசார் ஜாஸ்பர் தேவகுமாரின் வீட்டு ஜன்னலை உடைத்ததாக வர்க்கீஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் ஜாஸ்பர் தேவகுமார் மீது கற்பழிக்க முயற்சி செய்ததாகவும் வழக்கு பதிவு செய்து ஜாஸ்பர் தேவகுமாரை கைது செய்தனர். மருமகளை கற்பழிக்க மாமனார் முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.



