தேனி மே 29
முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத் தாக்கல் பகுதியில் சுமார் 14 ஆயிரத்து 700 ஏக்கர் நில பரப்பில் இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் முதல் போக சாகு படிக்காக ஜுன் முதல் வாரத்தில் அணையின் நீர் இருப்பு அனவை கணக்கிட்டு நீர் திறக்கப்பட்டு விவசாயம் நடை பெறும். தற்போது அணையின் நீர் மட்டம் 118.10 அடியாக இருப்பதாலும் தொடர்ந்து நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாலும் நீர் மட்டம் உயர வாய்ப்பு இருப்பதாலும் இந்த ஆண்டு ஜுன் மாதம் முதல் வாரத்தில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க அரசுக்கு நீர்பாசனத்துறை பரிந்துரை செய்துள்ளது. அரசு உத்தரவு பிறப்பித்த பின்னர் தண்ணிர் திறக்கப்படும். இதனால் நெல் நாற்றாங்கள் வளர்க்கும் பணிக்காக வயல்வெளிகளை சரி செய்யும் பணிகளை மிகவும் விறுவிறுப்பாக விவசாயிகள் செய்ய துவங்கி விட்டனர்.
மேலும் கடந்த 4 ஆண்டுகளாக சரியான மழை பெய்த காரணத்தாலும் நீர் இருப்பு இருந்தாலும் ஜுன் 01 ம் தேதி கணக்கிட்டு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது 5-வது ஆண்டாக நீர் மட்டம் மழை பெய்து உயர்ந்து வரும் காரணங்களால் தண்ணீர் திறந்து விட அதிகளவில் வாய்ப்பு உள்ளதாக வெளியான தகவல் அறிந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.