மதுரை மே 29
மதுரை
மாவட்ட ஆட்சியர்
மா.சௌ.சங்கீதா
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. மதுரை
மாவட்டத்தில்
தமிழ்நாடு அரசு வேளாண் உற்பத்தியை அதிகரித்து, உழவர்களின் வருமானத்தை பெருக்கிட, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
அந்த வகையில்
உழவர்கள் பயிர்சாகுபடியுடன் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற வேளாண் சார்ந்த தொழில்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்திட தேவையான தொழில்நுட்பங்களையும் திட்டங்களையும் உழவர்களை நேரடியாக சந்தித்து, எடுத்துக் கூறிடும் நோக்கில் வேளாண்மை உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன் வளம், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உடன் சேர்ந்து அனைத்து கிராமங்களிலும் “உழவர்களைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை” எனும் திட்டத்தின் படி முகாம்கள் 29.05.2025 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை (மாதந்தோறும் 2 வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் ) நடத்தப்படவுள்ளது.
மேலும்
மதுரை கிழக்கு வட்டாரத்தில் குன்னத்தூர் மற்றும் கள்ளந்திரி, மதுரை மேற்கு வட்டாரத்தில் தேனூர், ஆலாத்தூர், திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் விளாச்சேரி, சூரக்குளம், மேலூர் வட்டாரத்தில் தெற்குத்தெரு, அம்பலகாரன்பட்டி, கொட்டாம்பட்டி வட்டாரத்தில் மணப்பச்சேரி, அட்டப்பட்டி, வாடிப்பட்டி வட்டாரத்தில் அயன்குருவித்துரை, சித்தாலங்குடி, அலங்காநல்லூர் வட்டாரத்தில் தேவசேரி. முடுவார்பட்டி, திருமங்கலம் வட்டாரத்தில் சௌடார்பட்டி, ஆ.கொக்குளம், கள்ளிக்குடி வட்டாரத்தில் ஓடைப்பட்டி, தே.கல்லுப்பட்டி வட்டாரத்தில் கெஞ்சம்பட்டி, மோதகம், அச்சங்குளம், உசிலம்பட்டி வட்டாரத்தில் அல்லிகுண்டம், நக்கலப்பட்டி, செல்லம்பட்டி வட்டாரத்தில் பாப்பாபட்டி, கிருஷ்ணாபுரம், சேடபட்டி வட்டாரத்தில் அதிகாரிபட்டி, பாலையூர் முதலான 26 கிராமங்களிலும், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையிலான வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள், கால்நடை மருத்துவத்துறை, மீன் வளத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் மூலம் குறிப்பிட்ட கிராமங்களிலுள்ள சமுதாயக்கூடங்களில் நடத்தப்படும். இம்முகாம்களில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தொழில்நுட்ப அறிவுரைகள் பெறுவதுடன் அனைத்து துறை சார்ந்த நலத்திட்ட நலன்களை பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.


