ஊட்டி. பிப். 16.
நீலகிரி மலை மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலைக்கு அடுத்து மலை காய்கறி பயிர்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, நூல் கோல், போன்ற கிழங்கு வகைகளும் அவரை, கொடி பீன்ஸ், பச்சை பட்டாணி, முட்டைக்கோஸ், மற்றும் சீன வகை காய்கறிகளும் இங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் மாற்று பயிரான மேரக்காய் சவ்சவ் உற்பத்தி மாவட்டத்தில் பல இடங்களில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி மற்றும் பராமரிப்பு செலவினங்களும் குறைவாக இருப்பதால் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் மேரக்காய் விளைச்சல் உறை பனி காரணமாக கொடிகள் காய்ந்து மீண்டும் துளிர்க்க ஆரம்பித்து காய்க்கத் தொடங்கியுள்ள நிலையில் குஜராத் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து மேரக்காய் அதிகமாக இறக்குமதி செய்யப்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் விளையும் சவ்சவ் என்கின்ற மேராக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்கா ஆப்பிரிக்கா நாடுகளை தாயகமாகக் கொண்ட இந்த வகை காய் நீலகிரி மாவட்டத்தில் எல்லா சூழ்நிலையிலும் வளரக்கூடியது கடந்த வாரம் வரை பத்து ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை விற்பனையான மேரக்காய் தற்போது விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ விவசாயிகளிடமிருந்து ஐந்து ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதால் இந்த விலை கட்டுபடி ஆகாமல் காய்கறி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். வேலையால் கூலி, ஏற்றுமதி மற்றும் விற்பனை செலவு ஆகியவற்றுக்கு கட்டுபடி ஆகாததால் பல ஏக்கர் பரப்பில் பயிர் செய்யப்பட்டுள்ள மேரக்காய் கொடிகள் காய்த்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.