நாகர்கோவில் – நவ- 20,
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது கண், கிட்னி, இதயம் ஆகிய உடல் உறுப்புகளை தானமாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் மருத்துவர்கள் அறுவை சிகிற்ச்சை மூலம் எடுத்து நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் …
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் வயது 49 இவர் கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் டீ விற்பனை செய்து வந்தார், இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்து வந்த நிலையில் திடீரென மூளை நரம்பில் ரத்தக் கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். பின்னர் மருத்துவர்கள் மூளைச்சாவு அடைந்ததாக அவரது குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். சோகமான நிலையில் அவர் குடும்பத்தார் மூளைச்சாவு அடைந்த சுப்பிரமணியன் உடல் உள்ளுறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதனை அடுத்து நேற்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து அவரது கண், இதயம், சிறுநீரகம் உள்ளிட்டவற்றை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கு பொருத்த பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டது. இச்சம்பவம் குமரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் உறுப்புகள் செல்லும் ஆம்புலன்ஸுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஆங்காங்கே போக்குவரத்தை நிறுத்தி ஆம்புலன்ஸை இயக்கினர்.