ஈரோடு ஜன 11
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5 ந் தேதி நடக்கிறது. இதன் ஓட்டு எண்ணிக்கை 8 ந் தேதி சித்தோடு ஐ ஆர் டி டி கல்லூரியில் நடைபெறும் என்று ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர்
ராஜ கோபால் சுன்கரா கூறினார்.
இதை தொடர்ந்து அவர் வாக்குகள் எண்ணும் மையமான ஈரோடு சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியினை (ஐ ஆர் டி டி)நேரில் சென்று பார்வையிட்டு
வாக்குகள் எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .
அப்போது காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். மேலும், வாக்குப்பதிவு முடிவுற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பாதுகாத்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளன்று மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தேர்தல்
நடத்தும் அலுவலர் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் தேர்தல் வட்டாட்சியர் சிவசங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.