ஈரோடு ஜூன் 3
ஈரோடு மாநகர், ஈரோடு கிழக்கு ,மேற்கு,
தெற்கு மாவட்டங்கள்
உள்ளடக்கிய ஒருங்கிணைந்த
ஈரோடு மாவட்ட ம .தி.மு.க
பொறுப்பாளர்கள் மற்றும்
நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம் ஈரோடு மாவட்ட அலுவலகமான அண்ணா அறிவகம் கூட்ட அரங்கில்
அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜீன்ராஜ் தலைமையில் நடந்தது.
தணிக்கை குழு உறுப்பினர் வழக்கறிஞர் குழந்தைவேலு,
கொள்கை விளக்க அணி செயலாளர் வந்தியத்தேவன்,
மாநகர் மாவட்ட செயலாளர்
முருகன் ,அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் செந்தில்நாதன், சட்ட திட்ட குழு உறுப்பினர் சண்முகம் ,மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ரத்தினசாமி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஈரோட்டில் வருகிற 22 ந் தேதி நடைபெற உள்ள 31 வது பொதுக்குழு மற்றும் புதிய பொறுப்பாளர்களின் பணிகள் மற்றும்
ஆக்கப்பணிகள் குறித்து
ஆலோசனை நடந்தது.
இந்த கூட்டத்தில்
கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரக்குமாரன்
மேற்கு மாவட்ட பொறுப்பாளர்
சேதுபாஸ்கரன்
தெற்கு மாவட்ட பொறுப்பாளர்
கோபால்
மாநில தொண்டர் அணி துணை செயலாளர் முசிறி ரவிச்சந்திரன் ,சாதிக் மற்றும்
தலைமைக்கழக, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுத நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகள் பலர் கலந்து கொண்டனர்.



