தருமபுரியில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இப் பேரணிக்கு பசுமைத்தாயகத்தின் நிறுவனர் முனைவர் சௌமியா அன்புமணி கொடியை அசைத்து
துவக்கி வைத்தார்கள்.
இதில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் பையிக்கு எதிரான விழிப்புணர்வு அட்டைகள் ஏந்திய படியும், கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். இப்பேரணி அரசு மருத்துவமனை முதல் நான்கு ரோடு வரை சென்று முடிவடைந்தது. விழிப்புணர்வு கூட்டத்தில் முனைவர் சௌமியா அன்புமணி பேசியதாவது பூமி வெப்பம் அடைந்து வருவதால் பருவ மழை தவறி பொழிகிறது. இதில் வீணாகும் மழை நீர் கடலில் சென்று வீணாகிறது. இதன் காரணமாக விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்ய முடியவில்லை ஏரி, குளங்களை தூர்வாரி முறையாக பயன்படுத்தினால் மழை நீரை ராட்சத குழாய்கள் மூலம் நீர் நிலைகளில் நிரப்பினால் விவசாயத்திற்கும்,குடிநீருக்கும் பயன்படும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் உலகமே குப்பை காடாக மாறி வருகிறது. பிளாஸ்டிக் பை க்கு பதிலாக மீண்டும் மஞ்சள் பையை பயன்படுத்துமாறு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தெரிவித்தார். 1500 மரக்கன்றுகள் நடப்பட்டது. பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.