தருமபுரி ஏப்: 30
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம், மானியாத அள்ளி ஊராட்சியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் ஆகியவை பெற கட்டணம் செலுத்த தேவையில்லை. அதற்கு ஆகும் செலவை ஏற்றுக் கொள்வதாக சமூக ஆர்வலரும், கல்வி சேவை விருது பெற்ற பூரிக்கல் கிராமத்தை சேர்ந்த பு.சந்திரகாந்த் புஷ்பராஜ் அறிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பயன்படுத்தி கொள்ளவும் .மேலும் விவரங்களுக்கு 9751886311,9095999656 அழைக்கவும்.