சங்கரன்கோவிலில் நகர திமுக சார்பில் 16 வது வார்டு கால்நடை மருத்துவமனை அருகே உள்ள காமாட்சி அம்மன் கோயில் அருகே மழைக்காலத்தை முன்னிட்டு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் நகர செயலாளர பிரகாஷ் தலைமை வகித்தார். சங்கரன் கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், ஒன்றிய செயலாளர் பெரிய துரை முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அப்பாஸ், மாவட்ட பிரதிநிதி செய்யது அலி,வார்டு கழக நிர்வாகிகள் வார்டு தலைவர் கலைஞர், துணை செயலாளர் இஸ்மாயில் சேட் ,ஜானகி ராமன், நகர மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் மும்தாஜ்,மாரிசெல்வம், ,மருந்தாளுனர்கள் சக்தி, மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை 16 வது வார்டு செயலாளர் வீரமணி செய்திருந்தார்
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics