தென்காசி, ஏப்.22
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திற்குட்பட்ட கரிவலம்வந்தநல்லூர் நற்பவி அரங்கம், தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கம் மற்றும் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கம் ஆகிய இடங்களில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கலைஞரின் கனவு இல்லத்திட்டம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் பணி ஆணைகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணிஸ்ரீகுமார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா , தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்கள்.