அரியலூர்,ஜூன் 25:
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் நிகழ்ந்த கள்ளச் சாராய உயிரிழப்பைக் கண்டித்து அரியலூர் பேருந்து நிலையம் முன்பு தேமுதிகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் தேமுதிக கட்சி மாவட்டச் செயலாளர் இராம.ஜெயவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் கள்ளச்சராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசையும், கள்ளச்சாராயம் அருந்தி பலியாக காரணமாக இருந்த அதிகாரிகளையும் கண்டித்தும் தேமுதிகவினர் முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர் என்.ஜாகீர் உசேன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். நகர செயலர் தாமஸ் ஏசுதாஸ் பொறியாளர் அணி துணைச் செயலர் எம்.ராஜாபன்னீர்செல்வம், மாவட்ட அவைத் தலைவர் கே.எஸ்.வேல்முருகன்,மாவட்ட பொருளாளர் ஏ.சக்திவேல், மாவட்ட துணைச் செயலாளர்கள் பி.கே.தெய்வசிகாமணி, எம்.கே.சக்தி.பாண்டி, பி.ரவி, எஸ்.தேன்மொழி, தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுடனர்.