வேலூர்=04
வேலூர் மாவட்டம் ,பகவான் மஹாவீர தயாநிகேதன் ஜெயின் பள்ளியில் தீபாவளி திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு செயலாளர் ஸ்ரீ K. ராஜேஷ் குமார் ஜெயின் , தலைமை தாங்கி மாணவர்களை வரவேற்று அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.இவ்விழாவில் மருதர் கேசரி ஜெயின் அறக்கட்டளையின் தலைவர் ஸ்ரீ வி.திலிப்குமார் ஜெயின் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். வேலூர் ஸ்ரீ ஸ்வேதாம்பர் ஸ்தானக்வாசி ஜெயின் சங்கத்தின் துணைத் தலைவர் ஸ்ரீ எல்.பாகேசந்த் ஜம்பர், பொருளாளர் ஸ்ரீ எம்.வினோத்குமார் போஹ்ரா, அச்சங்கத்தின் குழு உறுப்பினர்கள் ஸ்ரீ ஜி.சுரேஷ் போஹ்ரா. ஸ்ரீ எல்.சுபாஷ் ஜம்பர், ஸ்ரீ ஜி.தீரஜ் பதேவாடா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இவ்விழாவில் பள்ளி முதல்வர்,எம்.மாலதி, பள்ளி கல்வி ஆலோசகர் ஆர்.கீதா அவர்களும் மாணவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர். மாணவர்கள் நடனம், நாடகம், கலந்துரையாடல் மூலமாக தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். விழாவின் நிறைவாக அனைவருக்கும் இனிப்பு வழங்கினர் .