தஞ்சாவூர். பிப்.28.
தஞ்சாவூர் காவேரி சிறப்பங்காடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை வளாகத்தில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அரவிந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கூறுகையில் .
முதல்வர் மருந்தகம் அமைப்பதற் கான உரிமம் பெறுதல், உட்கட்ட மைப்பு வசதிகள் அமைக்கும் பணி கள் தீவிரமாக நடந்து வருகிறது. முதல்வர் மருந்தகத்திற்கு மாவட்ட மருந்து கிடங்கு மூலம் மருந்து விநியோகம் செய்யப்படுகிறது மருந்து விநியோகம் செய்யப் படுவதற்கான வாகனமும் ஆய்வு செய்யப்பட்டது .மருந்தகத்திற்கு வந்த வாடிக்கையாளரிடமும் மருந்தின் இருப்பு, விலை விபரம் வ கேட்டறியப்பட்டது என்றார்
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ் நங்கை ஆகியோர் உடன் இருந்தனர்.