திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை ,தமிழ்நாடு அலையன்ஸ் மற்றும் சைல்டு வாய்ஸ் நிறுவனங்கள் சார்பில், மாவட்ட அளவிலான தன்னார்வலர்கள் மாநாடு திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டல்லில் நடைபெற்றது.இம்நாட்டிற்கு அமைதி அறக்கட்டளையின் மேலாளரும் குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பு உறுப்பினர் ஆ.சீனிவாசன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், முதுநிலை சிவில் நீதிபதியுமான திரிவேணி தலைமை தாங்கினார்.திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அமைதி அறக்கட்டளையின் தலைவர் ரூப பாலன் விளக்கமாக எடுத்துக் கூறினார் .சைல்டு வாய்ஸ் இயக்குநர் அண்ணாத்துரை மாநாடு குறித்த விளக்க உரையாற்றினார்.திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்திவேல்,சகி ஒருங்கிணைப்பு சேவை மைய ஒருங்கிணைப்பாளர் ஜான்சி ராணி, திண்டுக்கல் மாநகராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலர் கணேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். இன்றைய சமுதாயத்தில் மக்களின் பங்கேற்பு அவசியம் குறித்து முனைவர் பாலமுருகன் விளக்கவுரையாற்றினார். தன்னார்வலர்களின் அனுபவ பகிர்வுகளை ராஜேஸ்வரி, சுகன்யா,முத்துச்செல்வி, சிலமணி,சுதாதேவி மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோர் வழங்கினார்கள்.இந்த நிகழ்வுகளை அமைதி அறக்கட்டளையின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பவித்ரா ஒருங்கிணைப்பு செய்தார்.நிறைவில், சைல்டு வாய்ஸ் நிறுவனத்தின் மேலாளர் நெல்சன் சந்திர சேகர் நன்றி கூறினார்.இம்நாட்டில் சிறப்பாக பணி செய்த தன்னார்வலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வுகளை அமைதி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ரேணுகா தேவி, தமிழ்நாடு அலையன்ஸ் ஒருங்கிணைப்பாளர் சிபிஜா மற்றும் முனியாண்டி, திவ்யா, புவனேஸ்வரி, ராஜேஸ்வரி, சங்கீதா, சசிகலா, ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தார்கள்.இதில் திண்டுக்கல், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் மற்றும் ரெட்டியார் சத்திரம் ஆகிய ஒன்றியங்களில் இருந்து தன்னார்வலர்கள் சமுக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாவட்ட அளவிலான தன்னார்வலர்கள் மாநாடு

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics