காஞ்சிபுரம் மே 25
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ்.சிவசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நடைபெற்றது.
இதில்
மாநில செயற்குழு உறுப்பினர் கா.வேல்முருகன் , மாவட்ட செயலாளர் ஜீ.பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில், அரசு ஊர்தி ஓட்டுனர் 110 பேருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா தொடர்பான நிலுவையில் உள்ள வழக்கை துரிதப்படுத்த வேண்டும், ஓட்டுனர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 15 ஆண்டுகள் கடந்த மற்றும் கழிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு பதில் புதிய வாகனங்கள் பெறுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்குதல் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் ஒரு மனதாக இயற்றப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் சுமன், மாவட்ட அமைப்பு செயலாளர் சிலம்பரசன் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வேணு, ராஜேஷ் கண்ணன், தாஸ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.