குளச்சல் அக் 23
குமரி மாவட்டம் குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சிலை முதல் பள்ளி ரோடு வரையிலான சாலைவரை பல மாதங்களாக குண்டும் குழியுமாக காணப்பட்டது இதனால் வாகன ஓட்டைகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தார்கள். பலமுறை பொதுமக்கள் சார்பிலும், சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து தின தமிழ் பத்திரிக்கை வாயிலாக செய்திகள் வெளியிட்டதின் பயனாக நேற்றைய தினம் இச்சாலையை புதுப்பித்து தார் சாலை அமைக்கும் பணி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. எனவே பொதுமக்கள் சார்பாக குளச்சல் நகராட்சி நிர்வாகத்திற்கும், தின தமிழ் பத்திரிகைக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.



