சென்னை, ஜன- 09, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம்- சிஐ.டி.யு சார்பாக பணியில் இருப்போர் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் சென்னை பல்லவன் இல்லத்தில் நடைப்பெற்றது. இதில் தமிழகம் முழுவதிலுமிருந்து 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும்
போக்குவரத்து கழகங்களை மேம்படுத்திட வேண்டும். மறைமுக தனியார் மயம் ஒப்பந்த முறை நியமனத்தை கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். வாரிசுகளுக்கு பணியினை வழங்கிட வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஒய்வின் போதே.ஒய்வு கால பலன்கள், அகவிலைப்படி, மருத்துவக் காப்பீடு வழங்கிட வேண்டும் முதலான கோரிக்கைகளை இந்த தர்ணாப் போராட்டத்தில் வலயுறுத்தபட்டது.
இப்போராட்டத்தில் சிஐடியு மாநிலத்தலைவர் அ.செளந்தரராஜன், பொதுச் செயலாளர் சே. ஆறுமுக நாயினர் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர் .