கோவை ஜூலை:26
கோவை டாடாபாத் தமிழ்நாடு மின்சார வாரியம் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரியம் கேங்மேன் தொழிலாளர் சங்கம் சார்பில் நுழைவுவாயில் கூட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளராக மாற்றுதல்.கேங்மேன் பணியாளர்கள் அனைவருக்கும் சொந்த ஊர் மாற்றம் வழங்குதல்.
உடற்தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று மின்சார வாரியத்தால் நிர்வாக குழு அனுமதி வழங்கி பணியமர்த்தப் படாமல் நிலுவையில் உள்ள 5493 கேங்மேன் பணியாளர்களுக்கு பணி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி
தமிழக அரசு மற்றும் மின்சார வாரிய கவனத்திற்கு கொண்டு செல்லும் ஆர்பாட்டம் நடைபெற்றது.
கோவை மண்டலம் கோவை மாநகர் வடக்கு தெற்கு வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலக வருவாயிற் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோவை மண்டல செயலாளர் கார்த்தி மண்டல தலைவர் சென்னன் மண்டல பொருளாளர் நரசிம்மன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ச யுவராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். ஆர்பாட்டத்தில் மாநிலத் தலைவர் இளையராஜா மாநில பொருளாளர் ஜனார்த்தனன் மாநில செயலாளர்கள் கணேஷ் எம் சி பாலாஜி சத்திய பாரதி ஹரிதாஸ் அன்பரசு எம் பாலாஜி கார்த்தி மற்றும் வட்ட நிர்வாகிகள் கோட்ட நிர்வாகிகள் மற்றும் 500 கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கேங்மேன் தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நிர்வாகிகள் தெரிவிக்கையில்
கேங்மேன்களின் பிரதான கோரிக்கைகளை தமிழக அரசும் மின்சார வாரியமும் கவனம் செலுத்தாதபட்சத்தில் வேறு வழியின்றி அனைத்து கேங்மேன்களையும் ஒன்றுதிரட்டி ஆகஸ்ட் 19/08/24 திங்கட்கிழமை அன்று மாபெரும் காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டத்தை முன்னெடுத்து நடத்துவதென்று தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்ச்சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.என்று தெரிவித்தனர்.