திண்டுக்கல் ஜூன் 1,
சித்தையன்கோட்டை கிராமத்தில் தென்னையில் வல்லுநர் அமைப்பு பற்றி செயல் விளக்க கூட்டம் நடைபெற்றது .மதுரை வேளாண்மை கல்லூரி நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டாரத்தில் தங்கி பயின்று வருகின்றனர்.இதன் ஒரு அங்கமாக தென்னையில் வல்லுநர் அமைப்பு பற்றி ச.சந்துரு செயல் விளக்க கூட்டம் நடத்தினார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தென்னை மருத்துவர் செயலி- சாகுபடி முறைகள், பாசன மேலாண்மை, தென்னை ஊட்டச்சத்து மேலாண்மை, தென்னை பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, தென்னை பண்ணைக் கருவிகள், தென்னை அறுவடை மற்றும் அறுவடை பின் சார் தொழில்நுட்பம், தென்னை திட்டங்கள்மற்றும் தென்னைநிறுவனங்களை உள்ளடக்கியது. இதில் விவசாயிகள் பங்களித்து பயிற்சி பெற்று பயனடைந்தனர்.