இராமநாதபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழகத்தில் தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்தி வரும் மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து அரண்மனை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகி முரளிஜி, கவுன்சிலர் குமார், மாவட்ட ஒன்றிய நகர் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.



