தஞ்சாவூர். டிச.10
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் காச நோய் கண்டறியும் முகாம் விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
இந்திய முழுவதும் தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டம் செயல் படுத்தப்பட்டு காசநோய் கண்டறி தல் மற்றும் கண்டறியப்படும் காச நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்துதல் போன்ற பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன .ஒவ்வொரு வருடமும் காச நோயாளிகளை கண்டறிவதற் கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது
காச நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப் படுத்தி உள்ளன. இதற்காக காச நோயாளிகளை அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்யவும், காசநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் உடனடி யாக சிகிச்சை அளிப்பதற்காகவும், தீவிர காசநோய் கண்டறிதல் முகாம் நடத்தப்படுகிறது.
இந்தியா முழுவதும் 100 நாட்களு க்கு தீவிர காசநோய் கண்டறிதல் முகாம் நடத்தப்பட உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தீவிர காசநோய் கண்டறிய முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது யாருக்கேனும் 2 வாரத்திற்கு மேல் இருமல், மாலை நேர காய்ச்சல், சளியுடன் ரத்தம் வருதல், பசியின்மை ,எடை குறைதல், மார்பு விலாவில் வலி ஆகிய அறிகுறிகள் இருந்தால் முகாம் நடைபெறும் பகுதிக்குச் சென்று தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
பின்னர் அவர் காசநோய் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை வாகனங் களில் ஒட்டியதுடன், உறுதிமொழி யை வாசிக்க அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் துணை இயக்குனர் கள் செல்வகுமார் ,மாதவி ,உதவி திட்ட மேலாளர் சித்ரா, மாவட்ட திட்ட மேலாளர் ஜெனிபர், மருத்துவ அலுவலர் முகமது கலீல், உலக சுகாதார ஆலோசகர் தெய்வீகன் மற்றும் மாவட்ட காச நோய் மைய பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.