நாகர்கோவில் ஜூலை 31
கன்னியாகுமரி அஞ்சல் கோட்டம் சார்பில் தூத்தூரில் வைத்து நடைபெற்ற அஞ்சல் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் கிராம சபை கூட்டமானது அஞ்சல் துறை சார்பில் 29-ம் தேதி புனித தோமையார் சமூக நலக்கூடம், தூத்தூரில் வைத்து நடைபெற்றது. விழாவில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ தாரகை கத்பட் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். குழித்துறை உப கோட்ட ஆய்வாளர் கண்மணி, தபால் துறையின் அனைத்து திட்டங்களையும் பற்றி விளக்கிக் கூறினார். இவ்விழாவில் உதவி பங்கு தந்தை ராபின், பங்கு செயலர் ஜெமால்ட், லைலா, தூத்தூர் பஞ்சாயத்து தலைவி ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பரமேஸ்வரன் கலந்துகொண்டு நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் ஆதார் சேவைகள் வழங்குதல், சிறுசேமிப்பு திட்டத்தில் பொதுமக்கள் இணைதல், மத்திய மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க் வழியாக பெறுவதற்கு கணக்குகள் தொடங்குதல், பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டம் மற்றும் காப்பீடு திட்டங்கள் தொடங்குதல் அஞ்சல் துறையின் அனைத்து சேவைகளை பற்றிய விவரங்களை மக்களுக்கு தெரிவித்தல், பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கு சேமிப்பு கணக்குகள் தொடங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.