தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை மதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை மதிமுக அலுவலகத்தில் மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் ,தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம உதய சூரியன் ,வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது ஆலோசனை கூட்டத்தில்
சுரண்டை இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை விரைந்து தொடங்கிட வேண்டும் என மதிமுக மாநில துணை பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்தார். இது குறித்து அவர் தென்காசியில் நிருபர்களிடம் கூறியதாவது
தென்காசி மாவட்டத்தில், சுரண்டை, ஊத்துமலை பகுதி கடுமையான வறட்சி பகுதியாகும். 8.50 கி.மீ, தூரம் வாய்க்கால் தோண்டி இரட்டைகுளம் கால்வாய் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் 50 ஆண்டு கேரிக்கை ஆகும். இதனை நிறைவேற்றிட வேண்டுமென தொடர்ந்து விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் சுமார் 67 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக நிலம் கையப்படுத்த ரூ.11.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை தொடக்கத்தை உறுதி செய்திடும் வகையில் நீர்வளத்துறை அமைச்சரிடம் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். மதிமுக குழுவினரும் அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். இத்திட்டம் நிறைவேறினால் சுமார் 500 ஏக்கர் நிலம் நேரடியாகவும், 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு மூலமாக பயன்பெறும்.
இதே போல் சுமார் 40 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்ட இராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்ட பணிகளை தொடங்கிட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தொடர் முயற்சி காரணமாக நபார்டு வங்கி ரூ.40 கோடியை விடுவிடுத்து பணி நடைபெற்று வருகிறது விரைவில் இப்பணி நிறைவு பெறும். பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 12 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் அமைந்துள்ளது. மேல்படிப்படிப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கு இடம் கிடைக்காத நிலை உள்ளது அனைத்து மாணவர்களுக்கும் மேல்படிப்பு படித்திட வேண்டும் என்பது முதல்வரின் நோக்கமாகும். அந்த அடிப்படையில் பாவூர்சத்திரத்திரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைத்திட வேண்டும். இதற்கான இட வசதி உள்ளது.
திருச்செந்தூரில் இருந்து நெல்லை, பாவூர்சத்திரம், தென்காசி, விருதுநகர், மதுரை வழியாக பழனிக்கு சிறப்பு ரெயில் இயக்கிட வேண்டும். தென்காசியில் சுற்றுத்சூழல் தடையயை அகற்றி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனை கூட்டத்தில் தலைமை தணிக்கை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், அவைத்தலைவர் வெங்கடேஸ்வரன் ,
மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சுப்பையா, பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜன், ரெங்கசாமி ,மாவட்ட துணைச் செயலாளர்கள் துரைமுருகன், மருதச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் தென்காசி கிழக்கு மாரிச்செல்வம், தென்காசி மேற்கு வல்லம் மணி , இலத்தூர் முருகன், கீழப்பாவூர் வடக்கு ஆறுமுகச்சாமி, ஆலங்குளம் வடக்கு செல்வேந்திரன், நகர செயலாளர்கள் சுரண்டை பொன் மகேஸ்வரன், தென்காசி கார்த்திக், பேரூர் செயலாளர்கள் குற்றாலம் வேல்ராஜ், மேலகரம் வெங்கடாச்சலம், கீழப்பாவூர் ஒன்றிய துணைச்செயலாளர் மா.சத்தியராஜ்,
தென்காசி ராஜ் மற்றும் மதிமுக முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.