நீலகிரி. மே. 03.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் மத்திய அரசு நடத்திய தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்ற செளந்தர்யாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் ஆல் தி சில்ட்ரன் ஆகியன சார்பில் கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
தோட்ட தொழிலளர் தொழிற்பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜோர்ஜ், ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வில் வெற்றி பெற்ற சவுந்தர்யா
ஏற்புரை வழங்கிய பேசும்போது.
படிக்கும் காலங்களில் கவனமுடன் கிடைப்பதனால் எளிதில் வெற்றி பெற முடிகிறது. ஆரம்ப காலத்தில் இருந்தும், கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போதும் ஆர்வமுடன் படித்தேன். தொடர் முயற்சிகள் மேற்கொண்டதால் வெற்றி பெற முடிந்தது. கல்வி நம்மை உயர்த்தும் என்கிற எண்ணம் நம்முள் பதிந்து கொண்டு அக்கறையுடன் படித்தால் எந்த தேர்விலும் வெற்றி பெற முடியும். அரசு பணி என்பது மிக பெரிய மக்களுக்கு சேவை செய்ய கிடைக்கும் வாய்ப்பு எனவே அரசு பணியில் சேர அனைவரும் முன்வர வேண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தொழிற்பயிற்சி மைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.
கூடலூர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்ற செளந்தர்யா என்பவருக்கு பாராட்டு விழா.



