சேலம்,ஜூன் 28
சேலம் மாவட்டம் வலசையூர் சர்க்கார் மேடு பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (54) மற்றும் சுந்தர்ராஜன் காலணி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (55) இவர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.அந்த புகார் மனுவில் வலசையூர் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் 200 ஆண்டு காலமாக அனுபவத்தில் இருந்து வரும் எங்களது பூர்வீக சொத்து உள்ளது.இதனை ஒட்டி ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் தென்னங்கன்று வாழைமரம் உள்ளிட்ட செடிகளை வைத்து பராமரிப்பு செய்து வருகிறோம்.இந்த நிலையில் எந்தவிதமான அறிவிப்புமில்லாமல் அனுபவத்தில் உள்ள இடத்தில் அடியாட்களுடன் நுழைந்து விஏஓ மற்றும் சர்வேயர் செடிகளை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுகிறார்கள்.ஆகவே மாவட்ட ஆட்சியர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.