மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திஜ இழிவாக பேசியும், கொலை மிரட்டல் விடுத்தும் பேசிய பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் H.ராஜா , மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னித் சிங் பிட்டு, உத்தரபிரதேச மாநில அமைச்சர் ரகுராஜ் சிங், மகாராஷ்டிராவை சார்ந்த சஞ்சய் கெய்க்வாட் எம்.எல்.ஏ., டெல்லியை சார்ந்த தர்வீந்தர் சிங் மர்வா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி
செங்கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் க.கதிரவன் அச்சன்புதூர் பேரூர் காங்கிரஸ் தலைவர் சம்சுதீன் ஆகியோர் தலைமையில் அச்சன்புதூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது இவர்களுடன் டெய்லர் பிச்சையா, அனிஸ், நாகூர் கனி, மாரித்துரை, மாரிமுத்து, சுப்பையா ஆசாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.