சென்னை வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கத்தில் உள்ள பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று சனிக்கிழமை பிற்பகல் நடைப்பெற்றது. இதில் பெரி கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சரவணன்பெரியசாமி தலைமை தாங்கினார். கல்லூரி தலைமை இயக்க நிர்வாக அலுவலர் சசி வீரராஜன், கல்வி இயக்குனர் முனைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் புருஷோத்தம்மன் பட்டமளிப்பு விழா அறிமுக உரையும், கல்லூரி ஆண்டறிக்கையும் சமர்பித்தார்.
பட்டமளிப்பு விழாவிற்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் ஐ.ஏ.எஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், பட்டம் பெறும் 304 இளங்கலை மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டி பேசினார். அப்போது, அவர் பேசுகையில்
மாணவர்கள் முழு முயற்சியாக அர்பணிப்பு, கடின உழைப்பு மூலம் எந்த துறையிலும் என்னால் சாதிக்க முடியும் என்ற எண்ணம் கொள்ள வேண்டும். மேலும் படித்து பட்டம் பெற்று விட்டதால் எல்லாவற்றையும் கற்றரிந்துவிட்டோம் என்று என்னால் முடிந்தவரை கற்று கொண்டே இருக்க வேண்டும். கற்றரிந்ததில் தங்களது தனி திறமை வெளிப்படுத்தினால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி அடையலாம் என அறிவுரை வழங்கினார்.
பின்னர் பட்டம் பெற்ற மாணவர்கள் பட்டமளிப்பு உறுதிமொழியை ஏற்றனர்.
பல்கலைக்கழக அளவில் பத்தாம் இடம் பிடித்த இளங்கலை குற்றவியல் மற்றும் காவல்துறை ஆட்சி பிரிவில் படித்த மாணவர் A. சஞ்சய்க்கு கல்லூரி சார்பாக பதக்கமும் பட்டமும் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளாமனோர் பங்கேற்று சிறப்பித்தனர்.