கோவை நவ.23
பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கோவையை சேர்ந்த வீரர், வீராங்கனை கள், 11 பேர் கோப்பைகள் வென்றுள்ளனர்.
கர்நாடக மாநிலம். பெங்களூருவில் உள்ள தனியார் சிலம்பம் அட மியில் மூன்றாவது தேசிய அளவிலான அனைத்து பிரிவினருக்கான ஓபன் சிலம்பம் போட்டி சமீபத்தில் நடந்தது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள், 100க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கோவை மாவட்டம் பூசாரிபாளையத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களான சிலம்பத்தில் 11 பேர் கோப்பைகள் வென்றுள்ளனர். இதில்
முதல் பரிசு
ஜனனி, அமிர்தா, தர்ஷினி, தர்ஷன் இரண்டாம் பரிசு தக்ஷா,விமல்,சாய் பாண்டி. மூன்றாம் பரிசு நிஷாந்தினி, ஸ்ரீ ஹரி, தன்யா, ஹரிவரசன். கோப்பையை வென்றனர்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து,வெற்றி பெற்றவர்களில் இருந்து சிறந்த வீரர் விராங்கனைகள் சர்வதேச அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.வெற்றி பெற்றவர்களுக்கு சிலம்பம் ராமு ஆசான் பாராட்டுக்கள் தெரிவித்தார்.