கோவை மே:03
கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம் வார்டு எண்.72-க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில்,
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ளும் புதிய நிறுவனத்தின் (Srinivasa Waste Management Services) பணிகளை,
கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் , மற்றும்
மண்டல குழுத்தலைவர்கள் தெய்வயானை தமிழ்மறை, மீனாலோகு ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.
உடன் துணை மாநகரப் பொறியாளர் இளங்கோவன், உதவி ஆணையர் துரைமுருகன், மாமன்ற உறுப்பினர் கார்த்திக் செல்வராஜ், மண்டல சுகாதார அலுவலர்கள் வீரன், ராஜேந்திரன், முருகன்,உதவி பொறியாளர் ஜீவராஜ், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.