தஞ்சாவூர் மே.21.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் செம்மொழி நாள் விழா கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 510 மனுக்கள் வர பெற்றன. இந்த மனு க்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
பின்னர் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவி களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர் சுரேஷ் என்பவருக்கு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூபாய் 50 ஆயிரத்திற்கான புதிய செட்டாப் பாக்ஸ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் மணிமாறன், ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஸ்ரீதர் ,மாவட்ட வழங்கள் அலுவலர் கமலக்கண்ணன், தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் சமீர் பானு மற்றும் அனைத்து துறை அலுவலர் கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் செம்மொழி நாள் விழா கட்டுரை, பேச்சுப் போட்டி

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics