அரியலூர்,மே:17
அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் கடந்த 13 ஆம் தேதி டாரஸ் லாரி வீட்டிற்குள் புகுந்த விபத்தில் தாய் அம்பிகா உள்ளிட்ட மூன்று பேர் படுகாயம் அடைந்து அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் இதில் ஆபத்தான நிலையில் இருந்த ரம்யா என்ற சிறுமி மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது