ராமநாதபுரம், ஏப்.8-
விபத்தில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு அடைக்கலமாய் அமைந்த ECR ல் உள்ள மஸ்ஜிதுல் ஹமீது பள்ளிவாசல் அங்கு உரிய முதல் உதவி செய்த இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்துவர்கள் மனம் நெகிழ நன்றி தெரிவித்தது பார்ப்போரை மனம் உருக வைத்தது.
கடந்த 6/4/2025 ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் இருந்து சுற்றுலா மற்றும் புனித பயணமாக தமிழகம் வந்த பேருந்து புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிழக்குக் கடற்கரைச் சாலை தபால் நிலையம் அருகில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து காரணமாக பேருந்தில் பயணித்த கேரளத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ உறவுகள் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சுமார் 50 பேர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
விபரம் அறிந்த R. புதுப்பட்டினம் ஊர் மக்கள் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு ECR சாலையில் அமைந்துள்ள மஸ்ஜித் அல் ஹமீது பள்ளிவாசலில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான தண்ணீர் உள்ளிட்ட உடனடி உரிய உதவிகள் அனைத்தும் செய்து தந்தனர். பின்னர் அவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இந்த உதவியை பெற்றுக் கொண்ட இப்ராஹிம் நபியின் வழித்தோன்றல்கள் தங்களுக்குள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள்.
இதற்காக உழைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் சாலையில் பள்ளி கட்டிய நோக்கம் இது போன்ற ஒற்றைச் செயலிலேயே முழுமை பெற்று விட்டது என்பதற்கு ஆகப்பெரிய உதாரணம் இதுதான்.
தொடர்ந்து மக்களின் இன்னல் தீர்க்க நன்மைகள் பெருக காரணமாக இருக்க இறைவன் அருள் புரியட்டும்.
கிழக்குக் கடற்கரை சாலையில் இருக்கும் மக்கள் இந்திய துணைக்கண்டத்திற்கு சொல்லும் ஒற்றைச் சொல் இது போன்ற சமூக நல்லிணக்க நிகழ்வுகள் தான்.