தஞ்சாவூர் செப் 13.
தஞ்சாவூர்மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில், முதலமைச்சரின்சிறப்பு கடனுதவி திட்டங்களின் கீழ் சிறப்பாக நடத்தி வருகிற தொழில் நிறுவனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் செய்தியாளர் பயணம் நிறைந்தது மனம் நிகழ்ச்சி யின்படி பார்வையிட்டார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் நடராஜபுரத்தி ல் இயங்கி வரும் சர்டோனிக்ஸ் டெக்னாலஜிஸ் என்ற மென் பொருள் தயாரித்தல் நிறுவனம் ரூ.35 கோடி திட்டம் மதிப்பில் ரூ.33 இலட்சம் மானியத்துடன் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனம் 5 தளங்களில் இயங்கி வருகிறது. நிறுவனத்தில் பணியாளர்களான மென்பொருள் பணியில் ஈடுபடுகிறவர்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பணிபுரிவோர்களை பாராட்டினார் கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்த தாவது.டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர். மயிலாடு துறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களிலிருந்து மென் பொருள் தொடர்பாக படித்துவரும் இளைஞர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பினை முன்னுரிமையின் அடிப்படையில் வழங்கி வருகிறது. மேலும், வெளி மாவட்ட இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பினை அளித்து வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.35.00 கோடி அளவிலான திட்ட மதிப்பீட்டில் மாவட்ட தொழில் மையம் மூலமாக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து தற்பொழுது தஞ்சாவூர் மாவட்டம் மணக்கரம்பையில் இரண்டு ஏக்கர் பரப்பளவிலான 6 மாடி அடுக்குகளுடன் பல்வேறு வசதிகளைக் கொண்ட தகவல் தொழில்நுட்ப பூங்கா (APM IT Park) அமைக்கப்பட்டுள்ளது.
இத்தொழில்நுட்ப பூங்கா மூலம் தற்போது 300க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப் பினை அளித்து வருகிறது. இனி வரும் காலங்களில் இந்த எண்ணிக் கை 2000க்கும் மேலாக அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்திற்கு கடனுதவியாக ரூ.35.00 கோடி மதிப்பீட்டில் அரசு வழங்கும் முதலீட்டு மானியம் ரூ.33,00,000 வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம். தெரிவித்தார்.
பின்னர் சர்டோனிக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவன இயக்குநர் முகமது ஹனீஃபா தெரிவித்த
தாவது.தஞ்சாவூர் மாவட்டத்தில் எமது நிறுவனம் அமைப்பதற்கு உதவிய தமிழ்நாடு முதலமைச்சரு க்கு நன்றி. 2011ஆம் ஆண்டு இரண்டு ஊழியர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது 300 ஊழியர்களுடன் மென்பொருள் சம்பந்தமான சேவைகள், பொருட்கள், Hardware assembling & electronic assembling போன்றவற்றை செய்து வருகின்றது. இந்நிறுவனத் தில் உற்பத்தி செய்யப்படும் Software Products and services 100க்கும் மேலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசுடன் ரூ.35.00 கோடியிலான புரிந்துணர் வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. தங்க ள் நிறுவனத்திற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என இந்நிறுவன இயக்குநர் முகமது ஹனீஃபா தெரிவித்தார்.
தஞ்சாவூர் கரந்தையில் வேலன் டைல்ஸ் நிறுவனத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்கள்.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் ரூ.7.09 இலட்சம் மானியம் ரூ.1.77 இலட்சம் கடனுதவியுடன் மாவட்ட தொழில் மையம் மூலமாக இந்தியன் வங்கி உதவியுடன் நடைபெற்று வருகிற இந்நிறுவனம் வேலைவாய்ப்பு உருவாக்கி தந்துள்ளதாகவும், இத்திட்டத்தின் கீழ் உதவிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி எனவும் எஸ்.ரேவதி மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் பயணத்தின் போது, மாவட்ட தொழில் மைய மேலாளர் மணிவண்ணன்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன்,உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.