முதலமைச்சர் கோப்பை- 2024 ,மாவட்ட அளவில் சதுரங்கப் போட்டி விருதுநகரில் நடைபெற்றது. இதில் கலசலிங்கம் பல் கலைக்கழக பி.டெக், முதலாண்டு மாணவர் ஜே.ஆர். ஹரிவாஸ் கலந்து கொண்டு முதலிடம் பெற்று. 3,000 ரூபாய் ரொக்கப்பரிசும் பெற்று சாதனை புரிந்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்த இப்போட்டியில், மாவட்டத்தில் பல்வேறு கல்லூரிகலில்லிருந்து மொத்தம் 80 திற்க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வேந்தர் கே.ஸ்ரீதரன், துணைத் தலைவர் முனைவர்.எஸ்.சசி ஆனந்த், துணைவேந்தர் முனைவர்.எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வி. வாசுதேவன் ஆகியோர், வெற்றி பெற்ற மாணவரையும்,
விளையாட்டு துறை இயக்குநர்கள் சிதம்பரம், விஜயலட்சுமி, செல்வகுமார்
ஆகியோரையும் பாராட்டினார்.
முதலமைச்சர் கோப்பை-2024: கலசலிங்கம் பல்கலைக மாணவர் முதலிடம்

Leave a comment