கொல்லங்கோடு, பிப்- 14
கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனுகுமார் (39). மத்திய ரிசர்வ் படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அர்ச்சனா (36)
இவர்களுக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகிறது. 13 வயதில் ஒரு பெண் பிள்ளை உள்ளது. சுனுகுமார் தனது மனைவியின் மீது சந்தேகம் இருந்தால், விடுமுறைக்கு வரும் போதெல்லாம் மனைவியை தாக்குவது வழக்கம். அர்ச்சனா குடும்ப நலன் கருதி யாரிடமும் சொல்லாமல் சகித்து வந்துள்ளார்.
தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள சுனுகுமார் நேற்று காலையில் குடிபோதையில் வந்து மனைவியை தாக்கி உள்ளார். அர்ச்சனா இது குறித்து யாரிடமும் சொல்லாமல் வீட்டிலேயே வீட்டுக்குள்ளே இருந்துள்ளார். தொடர்ந்து மீண்டும் மாலையில் குடிபோதையில் வந்து மனைவியை தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி போட்டு இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.
இதில் வலியால் அர்ச்சனா சத்தம் போட்டு உள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவரை காப்பாற்றி உள்ளனர். தொடர்ந்து அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு சுனுக்குமார் அங்கிருந்து சென்றுள்ளார்.
இதில் காயமடைந்த அர்ச்சனா குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து சுனுகுமாரை கைது செய்தனர்.