தஞ்சாவூர். ஜன.25.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்
தொடர் மழை மற்றும் பனி காரணமாக நெல் கொள்முதலுகா ன ஈரப்பதத்தை 17 சதவீதம் என்பதி லிருந்து தளர்த்தி 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள் முதல் செய்ய அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது
இதை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களின் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் இருப்பு மற்றும் ஆய்வு பிரிவு உதவி இயக்குனர்கள் டி எம் பிரீத்தி, வி. நவீன் ,தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல் அபிஷேக் பாண்டே ஆகியோர் கொண்ட குழுவினர் தஞ்சாவூர் வந்தனர்.
இதையடுத்து ஒரத்தநாடு அருகே கக்கரை கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய த்தில் விவசாயிகள் விற்பதற்காக கொண்டு வந்து கொட்டி வைத்து ள்ள 5 நெல் குவியல்களில் இருந்து தலா 4 சிறு பைகளில் மாதிரி சேகரித்தனர்.
மத்திய குழுவினர் விவசாயிகளி டம் கருத்துகளையும் கேட்டறிந்தன ர் .அப்போது ராயமுண்டான் பட்டி வே. ஜீவக்குமார், கக்கரை ஆர் சுகுமார், வடக்கூர். எல்.பழனியப்ப ன் உள்ளிட்ட விவசாயிகள் பருவம் தவறிய மழை, பனிமூட்டம், சாதகம் மற்ற தட்பவெப்ப நிலை உள்ளிட்ட காரணங்களால் நெல்லில் ஈரப் பதம் 22 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாகவும், அதனால் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதித்தால் தான் விவசாயிகள் இழப்பிலிருந்து காப்பாற்ற முடியும் என மத்தியில் குழுவினரிடம் வலியுறுத்தினர்
பின்னர் இக்குழுவினர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குனர் அண்ணாதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
மத்திய குழுவினர் தற்போது நெல் கொள்முதல் நிலையங்களிலும் 5 நெல் குவியல்களில் இருந்து தலா 4 மாதிரிகள் என்ன மொத்தம் 80 மாதிரிகளை சேகரிக்கவுள்ளனர் இதை அக்குழுவினர் ஆய்வு ஆய்வகத்தில் ஆய்வு செய்து, ஈரப்பதம், உடைந்த நெல்மணிகள், வெளி பொருள்கள் உள்ளிட்ட வற்றைக் கண்டறிந்து, மத்திய அரசிடம் முன்மொழிவை கொடுக்க வுள்ளனர். அதன் அடிப்படையில் மத்திய அரசு அறிவிப்பை வெளியிடும்.
தமிழகத்தில் இதுவரை 5.76 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டை விட நிகழாண்டில் 30 ஆயிரம் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. சம்பா தாளடி அடுத்து கோடை பருவம் உள்ளிட்டவற்றின் மூலம் கடந்த ஆண்டை விட நிகழாண்டில் அதிகமாக கொள்முதல் செய்யப்பட வாய்ப்பு ள்ளது என்றார். இயக்குனர்
பின்னர் ஒரத்தநாடு, தெலுங்கன் குடிக்காடு, புலவன் காடு ,மதுக்கூர் ஆகிய பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங் களிலும் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மேலாளர் (தர கட்டுப்பாடு) செந்தில், தஞ்சாவூர் முது நிலை மண்டல மேலாளர் (பொ) கார்த்திகை சாமி ,வேளாண் துறை இணை இயக்குனர் வித்யா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.