திருப்பூர் ஜூலை:31
மாணவர் அணி திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க முத்தம்மாள் அறக்கட்டளை இணைந்து நடத்திய தெய்வத்திரு க.முத்தம்மாள் க.திலகவதி நினைவு கோப்பைக்கான 2-ம் ஆண்டு தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் கேரம் போட்டி (தம்பிங்) தமிழ்நாடு கேரம் சங்கம் மற்றும் திருப்பூர் மாவட்ட கேரம் சங்கம் வழிகாட்டுதலின்
படி திருப்பூர் பல்லடம் சாலை, ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் கடந்த 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்கம், பீகார், ஓடிசா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
நேற்று மாலை இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு திமுக நிர்வாகியும், முத்தம்மாள் அறக்கட்டளை தலைவருமான செ.திலக்ராஜ் தலைமை வகித்தார், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கோபிநாத் வரவேற்புரையாற்றினார்.
திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் M.L.A., சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முதலிடம் பிடித்த மகாராஷ்ட்ராவை சேர்ந்த வீரர் முகம்மது குபுரான் அவர்களுக்கு டாக்டர் கலைஞர் கோப்பையுடன் ரூ.1,00,000 ரொக்கப்பரிசும், 2-வது இடம் பிடித்த கோவையை சேர்ந்த வீரர் அப்துல் ஆசிப் அவர்களுக்கு இனமான பேராசிரியர் கோப்பையுடன் ரூ.50,000 ரொக்கப்பரிசும், 3-வது இடம் பிடித்த கோவையை சேர்ந்த யோகேஷ் டோஸ்ரே அவர்களுக்கு க.முத்தம்மாள் கோப்பையுடன் ரூ.25,000 ரொக்கப்பரிசும், 4-வது இடம் பிடித்த சென்னையை சேர்ந்த வீரர் சகாய பாரதி அவர்களுக்கு க.திலகமணி கோப்பையுடன் ரூ.15,000 ரொக்கப்பரிசும் மற்றும் திருப்பூர் மாவட்ட கபாடி குழு தலைவர் ஜியோ செல்வராஜ் ஏற்பாட்டில் முதலிடம் பெற்ற வீரருக்கு 1 பவுன் தங்க நாணயமும், 2, 3, 4 இடம் பெற்ற வீரர்களுக்கு 1/2 பவுன் தங்க நாணயமும், வழங்கினார்.
மேலும் வருகின்ற நவம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகானத்தில் நடைபெறவிருக்கும் உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவிருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவிகள் மித்ரா, நாகஜோதி, கசீமா ஆகியோரை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத்தொகையாக தலா ரூ.1,00,000 /- தனது சொந்த நிதியில் இருந்து காசோலையாக வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தெற்கு மாநகர செயலாளர் TKT மு.நாகராசன், வடக்கு மாநகர செயலாளர் மேயர் ந.தினேஷ்குமார், மாநில மாணவர் அணி துணை செயலாளர் பொன்ராஜ், தமிழ்நாடு கேரம் சங்க மாநில செயலாளர் மரிய இருதயம், திருப்பூர் மாவட்ட கேரம் சங்க செயலாளர் சிவகுமார், பகுதி செயலாளர்கள் மேங்கோ பழனிசாமி, மு.க.உசேன், மியாமி அய்யப்பன், மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டக் கழக செயலாளர் நந்தகோபால், மகளிர் அணி நிர்வாகிகள் உமாமகேஸ்வரி, கலைச்செல்வி, ஆனந்தி, மாணவர் அணி நிர்வாகிகள் டேவிட் இளவரசன், ரேவதி அருள்பரகாஷ், சக்திவேல், பிரேம்நாத், சுந்தரமூர்த்தி, இந்திரவிஜய், கௌதம், மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர், விழா இறுதியில் கன்னியப்பன் நன்றியுரையாற்றினார்.