கோவை ஜூன:02
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.கார்த்திகேயன், இ.கா.ப. முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
அதன் அடிப்படையில் கோவை ஆலந்துறை காவல் நிலைய காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் தலைமையில் நரசிபுரம் ஆலமரம் அருகில் சென்று சோதனை மேற்கொண்ட போது சட்டத்திற்கு விரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் மகன் சுந்தர் (30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் 1 வாகனத்தை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும். என்று தெரிவித்தனர்.