ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ரூ.3 போடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் மணி மண்டபத்தினை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பால்வளத்துறை மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜ கண்ணப்பன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கவுர், பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.



