திருவாரூர்
பிப்ரவரி 15,
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட செல்லூர் ஊராட்சியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் 21 வகுப்பறைகள் கொண்ட அரசு கலைக்கல்லூரி கட்டிட கட்டுமான பணியினை உயர்க்கல்வித்துறை அமைச்சர் முனைவர்.கோவி.செழியன் , மாவட்ட ஆட்சித்தலைவர் .வ.மோகனச்சந்திரன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் தலைவர் .உ.மதிவாணன் ;, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் , திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யு.கருண்கரட், ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
இவ்ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன், கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபு, வட்டாட்சியர் ராஜாராமன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.