வேலூர் மாவட்டம்.
அண்ணனை கொலை செய்த தம்பி கைது
வேலூர்=10
வேலூர் சலவன்பேட்டை கச்சேரி தெருவை சேர்ந்த மோகன் (30) என்பவரை புடவை மற்றும் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை. தம்பி பாஸ்கர் (25) கைது.
வேலைக்கு செல்லாத அண்ணண் மோகன் மதுபோதையில் வந்து எப்போதும் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார். இன்றும் மதுபோதையில் வந்து தாய் மற்றும் மனைவியை தாக்கியுள்ளார் இதனை தடுக்க சென்ற தம்பி பாஸ்கரை கத்தியால் குத்த வந்துள்ளார் மோகன்.
தடுத்து ஆத்திரமடைந்த பாஸ்கர் அங்கு இருந்த புடவை மற்றும் கையிற்றால் மோகனின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.
பாஸ்கரை கைது செய்த வேலூர் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Msc முடித்துள்ள கைதான பாஸ்கர் பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வீட்டிலிருந்து வரை வேலை செய்து வருகிறார்.



