தஞ்சாவூர் ஜூலை 10
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவ ர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவிற்கான விளம்பர பிரசுரம் வெளியிடப்பட்டது.
மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 548 மனு க்கைளை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினார் கள்.
தஞ்சாவூர் அரண்மனை மைதான த்தில் தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்ககம் ,மாவட்ட நிர்வாக ம் சார்பில் ஜூலை 19ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவிற்கான இணையதளத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்து, விளம்பர பிரசுரத்தை வெளியிட் டார்.
பான் செக்கர்ஸ் பப்ளிக் பள்ளி, மண் காப்போம் இயக்கம், தி ஸ்ட்ரெட்ச் மல்டி ஸ்போர்ட்ஸ் அரேனா ஆகியவை இணைந்து நடத்திய சிலம்பம், ஸ்கேட்டிங், பத்மாசன நிலையில் தண்ணீரில் மிதக்கும் போட்டி போன்ற உலக சாதனை நிகழ்வில் கலந்து கொண் டு உலக சாதனை செய்து, வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட் டினார்.
மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர் 5 பேருக்கு தலா ரூபாய் 80,000 வீதம் மொத்த ரூபாய் 4 லட்சத்திற்கான காசோலையை யும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் மூளை முடக்குவாத த்தில் பாதிக்கப்பட்ட கும்பகோணம் வட்டத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு சிறப்பு நாற்காலியையும், முதல்வரி ன் பொது நிவாரண நிதியிலிருந்து தொழிற் கல்வி பயின்று வருவதற் கான உதவித்தொகை ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையை யும் ஆட்சித்தலைவர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், மாவட்ட தாட்கோ மேலாளர் ரெங்க ராஜன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கர், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் ஆகியோர் கலந்து கொண்டனர்.