ஈரோட்டில் புத்தக திருவிழா தொடக்கம்
ஈரோடு, ஆக. 4
தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் புத்தகத் திருவிழா ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் 2 ந் தேதி முதல் வருகிற 13-ந் தேதி வரை நடக்கிறது .இதன் தொடக்க விழாவுக்கு ஈரோடு மாநகராட்சி கமிஷனர் டாக்டர் மனிஷ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார்.
தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறை இயக்குனர் இளம் பகவத் கலந்து கொண்டு புத்தக அரங்கை திறந்து வைத்தார். உலகத்தமிழர் படைப்பு அரங்கத்தை முன்னாள் மத்திய மந்திரி ஈ வி கே எஸ். இளங்கோவன் எம் எல் ஏ திறந்து வைத்தார். முதல் விற்பனையை தேசிய நல விழிப்புணர்வு தலைவர் எஸ் கே எம் மயிலானந்தன் தொடங்கி வைத்தார் .
விழாவில் நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன், முன்னாள் எம் எல் ஏ ஆர். எம் .பழனிச்சாமி அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம், சஞ்சய் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் செயலாளர் அன்பரசு நன்றி கூறினார்.
முன்னதாக ஈரோட்டில் உள்ள அரசு இசைப்பள்ளி மாணவ மாணவிகளின் மங்கல இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.